logo
ஈரோடு  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்

03/Aug/2021 12:57:03

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் திங்கட்கிழமையையொட்டி ஏராளமான மக்கள் வந்து இருந்து தங்களது குறைகள் குறித்து மனுவில் புகார் பெட்டியில் போட்டுச் சென்றனர்.

இந்நிலையில், ஈரோடு கமலா நகரைச் சேர்ந்த லலிதா ( 51) என்பவர், ஆட்சியர்  அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் வந்து நின்று திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், அந்தப் பெண்ணிடமிருந்து மண்ணெண்ணை பாட்டிலை பறித்து அந்தப் பெண்ணை அருகில் அழைத்து விசாரித்தார். போக்குவரத்திற்காக நின்றிருந்த வாகன ஓட்டிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் லலிதா கூறியதாவது:என் கணவர் பெயர் ராஜா. நாங்கள் கருங்கல்பாளையம் கமலா நகரில் வசித்து வருகிறோம். என் கணவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும்  சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில், உடல்நிலை காரணமாக எனது கணவர் கடந்த 8 மாதங்கள் முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில், பணம் கட்டியவர்கள்   பணம் கேட்டு  என்னிடம் தொந்தரவு செய்யத் தொடங்கினார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டால், அவர் தனக்கு ஒன்றும் தெரியாது நீயே பார்த்துக்கொள் என்று விரட்டி விட்டார்.  பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல்.

இதுகுறித்து, போலீசாரிடம் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நான் வாழ்வதைவிட சாகலாம் என்று முடிவு செய்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும்  அவர் கூறினார்.

இதையடுத்து சூரம்பட்டி போலீசார் அந்த பெண்ணிடம் சமாதானம் பேசி விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Top