logo
கொரோனா விழிப்புணர்வு குறும்படம் மற்றும் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டிகள்:ஆட்சியர் தகவல்

கொரோனா விழிப்புணர்வு குறும்படம் மற்றும் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டிகள்:ஆட்சியர் தகவல்

01/Aug/2021 01:08:02

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் மற்றும் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்ததாவது: தமிழக அரசால் பல்வேறு வழிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது மாபெரும் கொரோனா விழிப்புணர்வு முகாம் 01.08.2021 முதல் 07.08.2021 வரை ஒரு வார கால நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களும் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறும்படம் எடுக்கும் போட்டியும், விழிப்புணர்வு மீம்ஸ் எழுதும் போட்டியும் நடத்தி சிறந்த படைப்புக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் நற்சான்றுகளும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

எனவே ஆர்வமுள்ள பொதுமக்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை உருவாக்கி அதனை 03.08.2021 -க்குள் னனாளினமஉழஎனை@பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 93453 33899 என்ற வாட்ஸ்அப் அலைபேசி எண்ணிற்கோ அல்லது துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்  6, சாந்தநாதாபுரம் 6 ஆம் வீதி, புதுக்கோட்டை 622 001 என்ற அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Top