01/Aug/2021 09:51:35
ஈரோடு, ஜூலை: ஈரோடு நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் மனைவி சரஸ்வதி (65). சென்னியப்பனுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டிருந்தார்.
இந்நிலையில் சரஸ்வதி மருத்துவமனை அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் நாங்கள் போலீஸ் என்றும் மப்டியில் வந்துள்ளோம் என்று சரஸ்வதிடம் அறிமுகம் செய்து கொண்டு இவ்வளவு நகைகளை கழுத்தில் அணிந்து சென்றால் பாதுகாப்பு இருக்காது.
அதை பர்சில் வைத்து சொல்லுங்கள் என்று கூறி அந்த மூதாட்டி அணிந்திருந்த நகையை வாங்கி பர்சில் வைப்பது போல் பாசாங்கு செய்து, அந்த மூதாட்டியிடம் பர்சை கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர். பின்னர் சிறிது தூரம் சென்று பர்சை திறந்து பார்த்தபோது அதில் நகை இல்லாததை கண்டு சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். கழுத்தில் 11 பவுன் நகை அணிந்து இருந்தாாாம்.
இதுகுறித்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த நூதன திருட்டு தற்போது மீண்டும் அரங்கேறியது அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.