logo
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

30/Jul/2021 06:54:13

புதுக்கோட்டை, ஜூலை: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து புதுக்கோட்டை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்  பா.கலைவாணி  வெளியிட்ட தகவல்:. 

 புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், துணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்புபணிக்கு மருத்துவம்சாரா பணியிடங்கள் மருந்தாளுநர்-15, பட்டயபடிப்பு (D.Pharm)  2 ஆண்டுகள் முடித்தவர்களிடமிருந்து 6 மாதங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும்.

 விருப்பம் உள்ளவர்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், சாந்தநாதபுரம் 6-ஆம் வீதி, புதுக்கோட்டை - 622001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 4.8.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. இதற்குப்பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 நேர்முக தேர்வு 9. 8.2021 அன்று காலை 10 மணி முதல் புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் (புதிய கட்டிடம், மாவட்ட நீதிமன்றம் எதிரில்)  நடைபெறும்.

 அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  

அறந்தாங்கி சுகாதாரப்பகுதி மாவட்டம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்புப்பணிக்கு (மருந்தாளுநர் பணியிடங்கள்-7) பட்டய படிப்பு 2 ஆண்டுகள் முடித்தவர்களிடமிருந்து 6 மாதங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 42, ஜீவா தெரு, ஸ்டேட் பாங்க் பின்புறம், அறந்தாங்கி - 614616 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.08.2021 மாலை 5 மணி வரை. பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நேர்முகத்தேர்வு 10.08.2021 அன்று காலை 10 மணிமுதல் அறந்தாங்கி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்  பா.கலைவாணி தகவல் தெரிவித்தார்.


Top