logo
ஈரோட்டில் மனநலம் பாதித்த முதியவர் தலை மீது கல்லை போட்டு எரித்துக் கொலை செய்த இளைஞர் கைது

ஈரோட்டில் மனநலம் பாதித்த முதியவர் தலை மீது கல்லை போட்டு எரித்துக் கொலை செய்த இளைஞர் கைது

23/Jul/2021 12:02:49

ஈரோடு, ஜூலை: ஈரோட்டில் மனநலம் பாதித்த முதியவர் தலை மீது கல்லை போட்டு எரித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி கரையில் உள்ள மயானத்தில் புதன்கிழமை  காலையில்  ஈரோடு  சுண்ணாம்புஓடை, பாலக்காட்டூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரான அசேன் சேட்டு(52) என்பவரை மர்ம ஆசாமிகள் தலையில் கல்லை தூக்கிபோட்டும், எரித்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

 இக்கொலை சம்பவம் தொடர்பாக, கருங்கல்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர்  கோபிநாத் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தார். 

இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக,   ஈரோடு ஆர்.என்.புதூர், அமராவதிநகரை சேர்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ்(36) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், வாலிபர் பிரகாஷ் ஈரோட்டில் பழைய இரும்பு கடையில் லோடுமேனாக வேலை செய்து வருவதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட அசேன்சேட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பிரகாஷின் முகத்தில் எச்சில் துப்பிய காரணத்தால்    முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை  இரவு நஞ்சப்பா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த அசேன்சேட்டுக்கும், பிரகாஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் ,அசேன்சேட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும், தடயம் தெரியாமல் இருக்க அவரது உடலை அருகிலிருந்த துணிகளை கொண்டு தீவைத்து எரித்துள்ளதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் பிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Top