logo
காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணிகள்: மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர். சி.சரஸ்வதி  நேரில்  ஆய்வு

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணிகள்: மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர். சி.சரஸ்வதி நேரில் ஆய்வு

21/Jul/2021 06:22:19

ஈரோடு,  ஜூலை: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணியினை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர். சி.சரஸ்வதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் வாய்க்கால், காலிங்கராயன் பாளையத்திலிருந்து ஆவுடையார் வரை செல்கிறது. இந்த காலிங்கராயன் வாய்க்கால் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை, நெல், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் கரைகள், பாலங்கள் மற்றும் மதகுகள் சிதிலமடைந்து காணப்பட்டது.

இதையடுத்து பொதுப்பணித்துறையின் சார்பில் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் முதல் ஆவுடையார் பாறை வரை 40 மைல் தூரம் உள்ள வாய்க்காலின் 21 பாலம்கள், 513 மதகுகள், 25 குமுழி பாலம், 2485 மீட்டர் நீளம் தடுப்பு சுவர், 1210 மீட்டர் கிளை வாய்க்கால் உள்ளிட்ட பணிகளை சீர் அமைப்பதற்காக நீட்டித்தல், புரனமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட நிதியின் கீழ் ரூ.76.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து சீரமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இப்பணிகள் முழுமையாக நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் ,காலிங்கராயன் வாய்க்காலில் நடைபெற்றுவரும் சீரமைக்கும் பணிகளை  மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர்.சி. சரஸ்வதி, சின்னியம்பாளையம் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பாலம் கட்டும் பணி, பாசூர் மாரியம்மன் கோவில் அருகில் கட்டப்பட்டு வரும் பாலம் மற்றும் கருமாண்டம்பாளையம், ஆவுடையார் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ..சிவசுப்பிரமணி, பாஜக., மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம், கொடுமுடி ஒன்றிய தலைவர் சேகர், ஒன்றிய பொருளாளர் ரகுநாதன், ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top