logo

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 20 பேர் மீது வழக்கு பதிவு: ரூ.9.30 லட்சம் அபராதம் விதிப்பு

19/Jul/2021 12:31:59

ஈரோடு, ஜூலை:தமிழகத்தில் கொரோனா 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 31-ந் தேதி வரை தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வகையான போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் விதிமுறைகளை மதிக்காமல் மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 357 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சமூக இடைவெளியை பின்பற்றாத 20 பேருக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது. வாகன விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு

24 மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.9.30 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்

Top