14/Jul/2021 02:16:36
ஈரோடு, ஜூலை: ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்டத் தலைவர் டாக்டர் மக்கள் ராஜன் தலைமையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். எம். பழனிச்சாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி ஆகியோர் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு பிரட், பழம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கொடுமுடி வட்டார காங்கிரஸ் தலைவர் கோபாலகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் தளபதி ரமேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் புனிதன், பொதுச்செயலாளர் ஆரிப் அலி, மாவட்ட மனித உரிமைகள் துறைத் தலைவர் மகேந்திரன்.
தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர். வெங்கடேஷ், ஆர்.எம்.ஓ டாக்டர் கவிதா, செவிலியர்கள் சகிலா, அனுஷா, மேகநாதன், ஸ்ரீதர், குமரேசன், உமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் அபிஷேகமும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, மதியம் சென்னிமலையில் உள்ள ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.