12/Jul/2021 05:24:01
ஈரோடு, ஜூலை: கொரோனா தாக்கம் காரணமாக மே 24-ந் தேதி முதல் ஈரோட்டிலிருந்து புதுச்சேரிக்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்து போக்கு வரத்து மீண்டும் தொடங்கியதால் பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.
கொரோனா தாக்கம் காரணமாக மே 24--ஆம் தேதியிலிருந்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 2 மாதத்திற்கு மேலாக போக்குவரத்துக்குதடை நீட்டித்து வந்தது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 13 கிளைகளில் தினமும் 728 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் கடந்த 5-ஆம் தேதி முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்தை இயக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 5 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது. முதற்கட்டமாக மாவட்டத்திற்குள்ளேயும், பிற மாவட்டங்களுக்கு என 375 பேருந்து கள் இயக்கப்பட்டு வந்தன. பஸ் இயங்க தொடங்கிய இரண்டு நாட்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஆனால் அதற்கு பின்னர் பேருந்து களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இன்னும் சிலர் நின்று கொண்டே பயணம் செய்யத் தொடங்கினர். இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில் தற்போது கூடுதல் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 570-க்கும் மேற்பட்ட பேருந்து கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் வெளிமாவட்டங்களுக்கு 80 சதவீத பேருந்து கள் இயங்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இன்று முதல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன
இந்நிலையில் இன்று முதல கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் புதுச்சேரிக்கு பேருந்துகளை இயக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் காலை 6.20 மணிக்கும், இரவு 8.40 மணிக்கும் புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் காரணமாக பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை முதல் மீண்டும் புதுச்சேரிக்கு பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. இன்று காலை 6.20 மணிக்கு ஈரோடுபேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியது. இதைப்போல் இன்று இரவு 8.40 மணிக்கு மீண்டும் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கும் பேருந்து சேவை தொடங்கி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.