logo
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

11/Jul/2021 12:31:27

ஈரோடு, ஜூலை: பெட்ரோல் டீசல் ,விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதேபோல் சமையல் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பின்படி, சனிக்கிழமை  ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே  மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் துரை சேவகன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தம் ராஜேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சதானந்தம், வடக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். இதில் நகர ,ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top