logo

காந்தி ஜெயந்தி: அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையினர் காந்தி சிலைக்கு மரியாதை

02/Oct/2020 08:55:01

 காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை  நிறுவனர் வைர.ந.தினகரன் தலைமையில்  சமூக இடைவெளியை பின்பற்றி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் காந்தியை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் காந்தி கண்ட கனவான வன்முறையற்ற தீண்டாமையற்ற மது மற்றும் போதைப் பொருட்களற்ற சாதி சமய சண்டைகளற்ற  சமத்துவ தேசத்தை அகிம்சை வழியில் உருவாக்கிட நாம் உறுதுணையாக இருப்போம் வன்முறை தீவிரவாதம் நடைபெறும் போது அதை அகிம்சை வழியில் தடுத்து நிறுத்திட நாட்டையும் நாட்டு மக்களையும் காத்திட உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Top