logo
ஈரோட்டில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் நூதன முறையில் போராட்டம்

ஈரோட்டில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் நூதன முறையில் போராட்டம்

08/Jul/2021 11:29:16

ஈரோடு, ஜூலை: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துஈரோட்டில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீஸவ், சமையல் எரிவாயு விலைஉயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் இன்று  மாவட்ட காங்கிரஸ் துணை அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், திருச்செல்வம், ஜாபர்சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பெட்ரோல், டீசல் ,கேஸ் விலை உயர்வை கண்டித்து நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் பி.ஏ .பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்டத் துணைத் தலைவர்கள் பாபு என்கிற வெங்கடாச்சலம், பாஸ்கர் ராஜ், ஈஸ்வரமூர்த்தி, கோதண்டபாணி, அம்மன்மாதேஷ், அரவிந்த ராஜா, மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி, எஸ்.சி. பிரிவு தலைவர் சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து.

சிறுபான்மை துணை தலைவர் கே.என். பாட்ஷா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், கனகராஜ் .வின்சென்ட், வட்டார தலைவர் நடராஜ், கராத்தே யூசப், சச்சிதானந்தம், சாகுல் அமீது, மாவட்ட செயலாளர்கள் சிவா, சதீஷ்,ஜித்தோ, கறிக்கடை,  இளைஞர் காங்கிரஸ் விஜய கண்ணா, சித்திக், மகபு பாட்சா, வத்தில் ராஜேந்திரன் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top