logo
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு சாதனை விருதுகள்

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு சாதனை விருதுகள்

08/Jul/2021 12:14:57

ஈரோடு, ஜூலை: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த வருடம் கொரானா தாக்கம் அதிகரித்து நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது அதன்படி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரானா முழுநேர சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 இந்நிலையில், போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் பற்றாக்குறை ஏற்பட்டது நோயாளிகள் சிகிச்சைக்கு வழியின்றி சிரமப்பட்டனர் இதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த மே 18-ஆம் தேதி 69 ஆயிரம் 200 சதுரடியில் மூன்று தளங்களுடன் 401 படுக்கைகள் கொண்ட கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டுமான பணி தொடங்கி ஜூலை 1-ஆம் தேதி 45 நாட்களுக்குள் முடிக்கப்பட்டது .

நவீன பிரீ காஸ்ட் ஸ்லாப்ஸ் மூலமாக மருத்துவமனை கட்டியதற்கும், அதிக எண்ணிக்கையிலான படுக்கை வசதிகள் அமைத்ததற்கும், மேலும் கொரானா பேரிடர் காலத்தில்  பொது நலனை முன்னிறுத்தி இப்பணியை மேற்கொண்டுதற்காக உலக அளவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஆசிய கண்ட அளவிலே ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகாடமி மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.

 இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் சேர்ந்தவர்களும் சாதனை விருதுகளை வழங்கிய நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர்.

 இதுகுறித்து, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சகாதேவன் கூறுகையில், கொரானா மூன்றாம் அலை வரும் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவர்கள் கூறி வருகின்றனர் அவ்வாறு வரும் பொழுது இந்த மருத்துவமனை கொரானா சிகிச்சைக்காக முழுவதும் பயன்படுத்தப்படும் கொரானா தோற்று முழுவதும் ஒழிந்த உடன் இந்தமருத்துவமனை ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மருத்துவமனையாக  மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார் அவர்.

Top