logo
கொடுமுடி அருகே குடும்பத்தகராறு:  2 குழந்தைகளை விஷ மாத்திரை கொடுத்துந தாயும்  தற்கொலை செய்து கொண்டனர்

கொடுமுடி அருகே குடும்பத்தகராறு: 2 குழந்தைகளை விஷ மாத்திரை கொடுத்துந தாயும் தற்கொலை செய்து கொண்டனர்

06/Jul/2021 09:32:30

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே குடும்பத்தகராறு  2 குழந்தைகளை விஷ மாத்திரை கொடுத்துந தாயும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த வீரப்பகவுண்டன்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபுசங்கர்(40). விவசாயி. இவரது மனைவி சசிகலா(33). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் ,மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிரபுசங்கர், சசிகலா ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சசிகலா தற்கொலை செய்ய முடிவு எடுத்து வாழைப்பழத்தில் விஷ மாத்திரையை வைத்து தனது மகனுக்கும், மகளுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார்.

பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் பிரபுசங்கரிடம் அவரது மகளும், மகனும் விஷ மாத்திரை சாப்பிட்டதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபு சங்கர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவி, மகன், மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சசிகலா , அவரது மகன் ,மகள் மூவரும் இறந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  பெருந்துறை டி.எஸ்.பி .செல்வராஜ், மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து மூவர்  உடலையும்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரபு சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Top