02/Oct/2020 07:37:18
புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் அண்ணல் காந்தியடிகளின் 151 -ஆது பிறந்த நாலில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச்சிலைக்கு கல்லூரித்தலைவர் கவிஞர் ஆர்.எம்.வி.கதிரேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் ஆர்.ஏ.குமாரசாமி மற்றும் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லுரி, கல்வியியல் கல்லூரிகளின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.