logo
பொற்பனைக் கோட்டைக்கு  புதிய  பேருந்து சேவை:அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

பொற்பனைக் கோட்டைக்கு புதிய பேருந்து சேவை:அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

04/Jul/2021 07:30:42

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலுக்கு புதிய பேருந்து சேவையை  சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டைஅருகிலுள்ளபொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்    திருக்கோவில்  மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு   பக்தர்கள்   அதிகம்பேர் வந்து செல்கின்றனர் இதைச்சுற்றியுள்ள   கிராமங்களில்  ஆயிக்கணக்கான மக்கள்   வசித்து வருகின்றனர்.

இங்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில்  புதிய பேருந்து போக்குவரத்து சேவையை (4-7-2021)               ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்இந்த பேருந்து  ஆலங்குடியிலிருந்து  மாஞ்சன்விடுதி, பாப்பாம்பட்டி வம்பன் ரோடு, பொற்பனைக் கோட்டைமுனீஸ்வரர் கோவில், இம்னம்பட்டி, திருக்கட்டளை ஆகிய ஊர்கள் வழியாக புதுக்கோட்டைக்கு இயக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில்  மாவட்டவருவாய் அலுவலர் சரவணன் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, புதுக்கோட்டை அரசு போக்கு வரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பு, வட்டாட்சியர் பொன்மலர் மற்றும்  பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்    திருக்கோவில் பழனியப்பன் பூசாரி ,அடைக்கலம்பூசாரி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள்   சமூகஆர்வலர்கள்  பக்தர்கள்  கலந்து கொண்டனர்

இந்நிகழ்வின் போது அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனிடம் பொதுமக்கள் மற்றும்  பூசாரிகள்   பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.   

Top