logo
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

01/Jul/2021 11:09:26

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறதுஇத்திட்டத்தின் கீழ் 2021-2022 -ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதிகள் 1.1.2021-ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்றுதமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ  (www.tamilvalarchithurai.comஇலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தேர்வு  செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.8.2021-க்குள் அளிக்கப்பட வேண்டும்.

Top