logo
பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட  எஸ்பி.நிஷா பார்த்திபன்  ஆய்வு

பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி.நிஷா பார்த்திபன் ஆய்வு

28/Jun/2021 07:29:25

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேசுகையில் காவல்துறையினர் பொது மக்களிடம் காவல்துறை உங்கள் நண்பன் என்ற நட்புறவுக்கேற்ப அன்பாகவும் நட்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் காவலர்களிடையே பேசிய  எஸ்பி.நிஷா பார்த்திபன் பொது மக்களிடம் கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்து கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், வாகனத்தின் ஆவண நகல் போன்ற ஆவணங்களை இருசக்கர வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் கண்ணியத்துடன் எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதில் பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலகண்ணன்இன்ஸ்பெக்டர் தனபாலன், எஸ்ஐ சுப்பிரமணியம், தலைமைக்காவலர் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Top