logo
புதுக்கோட்டை சர்வஜித் அறநிலையம் சார்பில் நலிந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பு

புதுக்கோட்டை சர்வஜித் அறநிலையம் சார்பில் நலிந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பு

26/Jun/2021 11:58:41

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை சர்வஜித் அறநிலையம் சார்பில் ஊரடங்கால் சிரமப்படும் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன,

புதுக்கோட்டையில் கடந்த 14 ஆண்டுகளாக சர்வஜித் அறநிலையம் மக்கள் சேவையாற்றி வருகிறது. அதன்படி புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த 3 குடும்பங்களுக்கு 1 மாதத்துக்குத்தேவையான  ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள  அரசி, மளிகை மற்றும் காய்கனிகளை சர்வஜித் அறநிலைய நிறுவனர் மூத்த மருத்துவர் எஸ். ராமதாஸ் நேரில் சென்று வழங்கினார். நிகழ்வில், சர்வஜித் அறநிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 புதுக்கோட்டையில் கடந்த 14 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் சர்வஜித் அறநிலையம் சார்பில்   அடக்கம் செய்ய வழியில்லாத பிரேதங்களை உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் அடக்கம் செய்து வருகிறது. இது வரை சுமார் 481 பிரேதங்களை இந்த அறநிலையம் அடக்கம் செய்து சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது..

 

Top