logo

புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

01/Oct/2020 11:03:17

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்கப் பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தொமுச மாவட்ட நிர்வாகி ரவிச்சந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவர் க. முகமதலிஜின்னா உள்பட ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொன்னமராவதி:  அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுக மத்திய சங்கத்தலைவர் அ.அடைக்கலம் தலைமை வகித்தார். கிளைத் தலைவப் முத்தையா முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க நிப்வாகிகள் தங்கமணி, சாகுல்ஹமீது, சிவஞானம் மற்றும் எல்பிஎப், சிஐடியு, ஏஎல்எல்எப் -நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டை: பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ கிளை தலைவர் எம். ஷேக் முகம்மது தலைமை வகித்தார். ஜமாஅத் செயலர் உபயத்துல்லா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கிளை தலைவர் ஆசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டை: அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மண்டல தலைவர் கே. கார்த்திகேயன் தலைமை வகித்தார் . எல்.பி.எப். சங்க செயலர்சபாபதி, மு.காளிதாஸ், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top