logo
ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

18/Jun/2021 04:55:37

ஈரோடு, ஜூன்:  ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.  

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்   ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அதிமுக வை அபகரிக்க முயற்சி செய்யும்  சசிகலாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவு ரைப்படி கொரோனோ நோய் தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துவது. கொரோனா நோய் தொற்று தீவிரமாக இருக்கும் காலத்தில் தடுப்பூசிகள் போடுவதற்கு மக்களை அலைக்கழிக்கும் தமிழக அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, பகுதி கழக செயலாளர்கள் கேசவமூர்த்தி , சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கமுத்து கோவிந்தராஜ், ஆவின் துணை தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top