logo
ஈரோடு அருகே  வாகன சோதனையில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல்

ஈரோடு அருகே வாகன சோதனையில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல்

16/Jun/2021 07:58:41

ஈரோடு, ஜூன்: ஈரோடு அருகே சித்தோடு லட்சுமி நகர் சோதனைச்சாவடியில்  போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையில் காய்கறிமூடைகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து கடத்தி வந்த வாகனத்தையும் அதிலிருந்த  4 பேர் மீது வழக்குப்பதிவு  விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள லட்சுமி நகர் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியே வந்த ஒரு ஆம்னி வேனை சோதனை செய்ததில் காய்கறிகளையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 82 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


இது  தொடர்பாக காவல் துறையினர் ஆம்னி வேனில் வந்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், நாகேஸ்வரன், முத்துச்சாமி, மோகன்ராஜ் என்பதும் வெளி மாவட்டத்தில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Top