01/Oct/2020 02:12:40
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் மங்கனூர் கொப்பம்பட்டி செல்லும் சாலையில் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.கந்தர்வகோட்டை மங்கனூர் ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மங்கனூர் கொப்பம்பட்டி இடையே செல்லும் ஆற்று பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மங்கனூர் கொப்பம்பட்டிக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் மழையால் ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.