logo
ஈரோட்டில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்

30/Sep/2020 10:40:37

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிற்சங்க ஓய்வூதியோர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மாது தலைமை  வகித்தார். மண்டல செயலாளர் ராவணன் தொ.மு.ச. மண்டல பொறுப்பாளர் குழந்தைசாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாதம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை பணப் பலன்கள் வழங்க வேண்டும். சிக்கன கூட்டுறவு சங்கத்தின் மூலம் 9 ஆண்டுகாலமாக வழங்காமல் உள்ள ஈவு-வட்டித் தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  முழக்கமிட்டனர்.

இதைப்போல் சென்னிமலை சாலையில் உள்ள  போக்குவரத்து  பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 14 -ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும். கொரோனாவால் உயிர்  இழந்த போக்குவரத்து ஊழியர்கள்  குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம்  நிதி உதவி வழங்க வேண்டும். முழுமையான பஸ்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.


Top