logo
மன அழுத்தம் நீக்கும் புத்துணர்வு மையமாய் செயல்படும் புதுக்கோட்டை கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையம்

மன அழுத்தம் நீக்கும் புத்துணர்வு மையமாய் செயல்படும் புதுக்கோட்டை கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையம்

03/Jun/2021 07:47:51

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கோவிட் தொற்று நோயாளிகளுக்கு அன்பான பேச்சு, அழகான சிரிப்பு அர்த்தமுள்ள வாழ்க்கை தொடர்பான   பயிற்சி அளிக்கப்படுகிறது . 

இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ் .உம்மல் கதீஜா மற்றும் கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மைய நோடல் அலுவலர் ஆ.மாமுண்டி   ஆகியோர் கூறுகையில்,  கோவிட் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறைப்படி அமுக்கரா சூரண மாத்திரை நெல்லிக்காய் லேகியம், தாளி சாதி சூரணம் பிரமானந்த பைரவ  மாத்திரை.

ஆடாதொடை மணப்பாகு கபசுர குடிநீர், கிராம்புகுடிநீர்,  ஓமக்குடிநீர்  மற்றும் பாரம்பரிய உணவு வகைகள், மூலிகை தாம்பூலம், புற மருத்துவமாக 8 வடிவ நடை பயிற்சி, மூலிகை தூபம், ஓமப்பொட்டணம், திருமூலர் பிராணயாமம், சுயவர்ம பயிற்சி யோக முத்திரை பயிற்சி போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும்  அன்பான பேச்சு, அழகான சிரிப்பு, அர்த்தமுள்ள வாழ்க்கை தொடர்பாக தினமும் ஆரோக்யமான வாழ்க்கை வாழ தேவைப்படும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மன அழுத்தத் தோடு வந்த நோயாளிகள் சுற்றுலா வந்தது போல் மகிழ்ச்சி வெள்ளத்தால் குணமடைந்து செல்கின்றனர்.  தினமும் மேற்கண்ட  பயிற்சியை சித்த மருத்துவர்கள் சரவணன், பத்மாவதி, வித்யா ஆகியோர் கொண்ட மருத்துவ குழு செய்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

Top