29/Sep/2020 04:26:14
ஈரோடு:பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாக நாளை தீர்ப்பு வர உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலகம், ஆலயங்கள் போன்ற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஈரோடு காவிரி ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைப்போல், கோபிச்செட்டிபாளையம், பெருந்துறை, அந்தியூர், பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.