04/May/2021 11:15:54
ஈரோடு, மே: ஈரோடு ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமைநடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெளிமாநில,வெளிமாவட்ட வியாபாரிகள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் 2 மாதங்களாக விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது.
ஒருவழியாக தேர்தல் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், கோடை கால விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகி வந்தனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பால் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய வியாபாரிகள் வருகை அடியோடு குறைந்தது. மேலும் சில்லரை வியாபாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜவுளி சந்தையில் வெளிமாவட்ட, வெளிமாநிலவியாபாரிகள் வருகை இல்லாத தால் மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடந்தது. ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்த சிறுவியா பாரிகளால் சில்லரை வியாபாரம் மட்டும் 25 சதவீதம் நடந்தாக ஜவுளி சந்தை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வருகின்ற 6-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதால்
தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: தேர்தல் நடத்தை
காரணமாக கடந்த 2 மாதங்களாக ஜவுளி சந்தை வியாபாரம் பெரிய அளவில் நடைபெறவில்லை. குறிப்பாக மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதைய டுத்து கோடைகாலம் என்பதால் வியாபாரம் மீண்டும்
சூடுபிடிக்கும் என்று
எதிர்பார்த்து காத்துக்
கொண்டிருந்தோம்.
மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இன்னும் சில நாட்கள் இதே நிலைதான் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.