26/Sep/2020 05:05:54
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேடு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளின்படி அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் மதிவாணன், முன்னாள் தலைவர் ஜெய் பார்த்தீபன், எஸ்.ஏ.எஸ். லீப் பகுருதீன், சிட்டிவாக் அக்பர்அலி, காதிபவன் ரமேஷ் ஆகியோர் நேரில் சென்று வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.