logo
தெலங்கானா மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 2,600 டன் புழுங்கல் அரிசி

தெலங்கானா மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 2,600 டன் புழுங்கல் அரிசி

26/Sep/2020 04:27:01

ஈரோடு: தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி. ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகிப்பதற்காக தெலங்கானா மாநிலம் கம்மரெட்டி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 2,600 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் தெலங்கானா மாநிலத்தில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த, ரயில் இன்று காலை ஈரோடு ரயில்வே குட்ஷெட்டுக்கு வந்தடைந்து. இந்த அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு ஈரோடு மூலப்பாளையம், பவானி சாலையில் உள்ள  மத்திய சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


Top