18/Feb/2021 11:16:50
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(12.2.2021) பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தார் காயமடைந்தவர்கள் சாத்தூர், படந்தால், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளைக் சேர்ந்தவர்கள். அனைவரும் சாத்தூர், சிவகாசி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்த மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் போலீசார் 5 தனிப்படை அமைத்து பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் குத்தகைக்காரர் உள்பட 6 பேரை தேடி வந்தனர்
இந்நிலையில், ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவே உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குத்தகைதாரர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரியை வியாழக்கிழமை அதிகாலையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.