logo
அந்தியூர்  அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை புலியால்  அச்சத்தில் பொதுமக்கள்

அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை புலியால் அச்சத்தில் பொதுமக்கள்

14/Feb/2021 07:15:16

ஈரோடு பிப்: அந்தியூர் அருகே நல்லாகவுண்டன் கொட்டாய் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை புலியால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்தில் யானை மான் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் நிலையில், சிறுத்தைப் புலிகளின்  எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது சாலைகளின் ஓரங்களில் அவ்வப்போது தென்படுவது வழக்கத்தில் ஒன்று. இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள நல்லாகவுண்டன் கொட்டாய் பகுதியில், நேற்றிரவு வழக்கத்தைவிட நாய்கள் அதிக அளவில் குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திவாகர் ( 21) என்பவர், வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.‌

அப்போது, நாய்கள் துரத்தியதில், திவாகரின் கண்ணெதிரில் சுமார் 3 மீட்டர் இடைவெளியில், மின்னல் வேகத்தில், சிறுத்தைப்புலி ரோட்டை நான்கு கால் பாய்ச்சலில் கடந்தது.  இதைப் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்த திவாகர், இதுகுறித்து பெற்றோர்களிடம் தகவல் கூறியுள்ளார். 

இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கால்நடை மருத்துவர் அர்ஜுனன் என்பவரது சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது சிறுத்தைப்புலியின்  நடமாட்டம் தெரியவந்தது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Top