logo
பிளஸ்-2  வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் -: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பிளஸ்-2 வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் -: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

12/Feb/2021 08:09:12

ஈரோடு, பிப்:பிளஸ்-2  வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றார்  அமைச்சர் செங்கோட்டையன்.

மத்திய அரசு கொண்டுவரும் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயற்சி அளிக்க அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. அதனால் தனியார் மூலம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.   நீட்தேர்வுக்கு 21 ஆயிரம்  விண்ணப்பித் திருந்தனர்.

 ஆனால் இலவச பயிற்சிக்கு 5817 பேர் மட்டுமே பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். பிளஸ்-2 வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்பட்டும் என கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு விலையில்லா அசீல் நாட்டு கோழி குஞ்சுகளும் 50 பயனாளிகளுக்கு விலையில் கறவை மாடுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

 அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:  தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பது தான் வழக்கம். ஆனால் தமிழக முதல்வர் தேர்தலுக்கு முன்னரே விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளார். 15 நாட்களில் அதற்கான ரசீது வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  விவசாய கடன் தள்ளுபடியில் தமிழகத்திலேயே கூடுதலாக பயனடைந்த மாவட்ட ஈரோடு மாவட்டம் தான். இந்த அறிவிப்பால்  விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இது பற்றி அனைத்து தரப்பு  மக்களும் மகிழ்ச்சியோடு வாழத்துகின்ற காட்சியை நாள் தோறும் பார்த்து வருகிறோம். குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில்  நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை.

பத்துக்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூலம் பயின்ற மாணவர் களின் கல்வி தரத்தை ஆய்வு செய்ய திறனாய்வு தேர்விற்கான பணிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது. 

ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்ப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். நீட்தேர்வுக்கு 21 ஆயிரம்  விண்ணப்பித்திருந்தனர் இந்த மாநிலத்திலும் நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பதில்லை. ஆனால் இலவச பயிற்சிக்கு 5817 பேர் மட்டுமே பயிற்சி மேற்கொண்டுவருகின்னர். தேர்தல்  தேதி வந்தவுடன் பொது தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். 

அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான சீருடை காலனி போன்ற அனைத்து பொருட்களும் அவர்களது வீடுகளுக்கு சென்று பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் பயிற்சி பெறுகின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது.

மத்திய அரசு கொண்டுவரும் நீட் ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயற்சி அளிக்க அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. அதனால் தனியார் மூலம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  பிளஸ்-2   வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 

இவ்விழாவில் கோட்டாட்சியர் ஜெயராமன் கால்நடை பாராமரித்துறை இணை இயக்குநர் வட்டாட்சியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Top