logo
திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது: திமுக எம்பி- கனிமொழி  பேச்சு.

திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது: திமுக எம்பி- கனிமொழி பேச்சு.

30/Jan/2021 10:15:24

புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்தார்,

இதன் பின்னர்  கனிமொழி செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது. 3 வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு, 2016 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டங்கள் ஷரத்துகள் குறித்து எந்தவிதமான கருத்தும் இடம்பெறவில்லை.

திமுக எந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் சிக்கவில்லை தேர்தலை சந்திப்பதற்கு தற்போது உள்ள சூழ்நிலையில் புது யுக்திகள் தேவைப்படுகிறது அதன் காரணமாகவே ஒரு நிறுவனத்திடம் திமுக புதிய உத்திகளை செயல்படுத்துவதற்கு அளித்துள்ளது. இதில் எதிர்க்கட்சிகளும் இதேபோன்று இத்திட்டத்தை செயல்படுத்து.கிறதே திமுக மற்றவர்களைப் போன்று நிமிடத்திற்கு நிமிடம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் கட்சி கிடையாது. 

 ஜெயலலிதா இருந்தபோது உதய் மின் திட்டம், நீட்தேர்வு ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்த விடாமல் எதிர்த்து வந்தார். தற்போதைய அதிமுக அரசு அவற்றை செயல்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கிடையாது.. பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. யார் அரசியலுக்கு வந்தாலும் தேர்தலில் என்றாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது 

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பது உறுதி, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான விரிசலும் இல்லை புதுச்சேரியில் தேர்தலுக்காக திமுக  பொறுப்பாளரை நியமிப்பது. வழக்கமான ஒன்று, அதேபோன்றுதான் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார் இதனால் கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் கிடையாது என்றார். நிகழ்ச்சியில் திருமயம் தொகுதி எம்எல்ஏ ரகுபதி, புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ- பெரியண்ணன் அரசு மற்றும் ஒன்றிய பேரூர்  நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top