logo

தமிழகத்தில் பிரதமர் கிசான் திட்ட முறைகேடு: திமுக உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

24/Sep/2020 09:27:14

தமிழகத்தில் பிரதமர் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக திமுக உறுப்பினர் எழுப்பிய  கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி பி.வில்சன் கேள்விக்கு   பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழகத்தில் நடைபெற்ற பிரதமர் கிஷான் திட்ட முறைகேடு தொடர்பாக மொத்தம் 13 மாவட்டங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 52 பேர் கைது ரூ.61 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

 


Top