logo
சசிகலாவை வரவேற்க படை திரட்டும் டி.டி.வி. தினகரன்

சசிகலாவை வரவேற்க படை திரட்டும் டி.டி.வி. தினகரன்

14/Jan/2021 06:57:57

சென்னை, ஜன::பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்காக  ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில் சுமார் 100 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கும்மிடிப்பூண்டி தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கட்சி நிர்வாகிகள் தங்கள் பங்குக்கு தொண்

டர்களை திரட்டி வர டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா இம்மாதம் இறுதியில் விடுதலையாகிறார். ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் எனக் கூறப்படும் நிலையில், இப்போதே அவரை வரவேற்று அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை டி.டி.வி.தினகரனும் அமமுக நிர்வாகளும் தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி இரவே தொண்டர்களை ஒசூர் செல்வதற்காக வாடகை கார்களை முன்பதிவு  செய்து வைத்திருக்கின்றனர். இதோடு ஊருக்கு தகுந்தவாறு ஒரு சில நிர்வாகிகள் பேருந்துகளை புக்கிங் செய்து வருகின்றனர். குறைந்தது 60 இடங்களில் இருந்து 100 இடங்கள் வரை சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட வேண்டிய இடங்களும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Top