logo
தொழிற்சங்க கூட்டமைப்புயினர் ஆர்ப்பாட்டம்.

தொழிற்சங்க கூட்டமைப்புயினர் ஆர்ப்பாட்டம்.

23/Sep/2020 07:38:03

ஈரோடு: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா காலத்தில் ஊதியம் கொடுக்க வேண்டும். பணிநீக்கம் ஊதியக் குறைப்பு போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு எடுக்க வேண்டும் .ஊதியக் குறைப்பு பிரச்சனைக்கு பேசி தீர்வு காணவேண்டும் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தவர்கள் அலைபேசி எண்ணை ஆதார் அட்டையில் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஏஐடியுசி மாவட்ட தலைவர் சின்னசாமி உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top