logo
 இன்று எம்.ஜி.ஆர்., 31-ஆவது நினைவு தினம் : மக்கள் மனதில் நீங்காத மாமனிதர்

இன்று எம்.ஜி.ஆர்., 31-ஆவது நினைவு தினம் : மக்கள் மனதில் நீங்காத மாமனிதர்

25/Dec/2020 12:41:47

சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 31-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.திரை உலகிலும், அரசியலிலும் முத்திரை பதித்து மக்கள் நெஞ்சத்தில் இன்றும் நீங்காத இடம்பிடித்திருப்பவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.

கொள்கை முழக்கம், அனல் பறக்கும் வசனங்கள், கருத்துகள், இனிமையான பாடல்கள் மூலம் எம்.ஜி.ஆரின் படங்கள் மக்கள் வரவேற்பைப் பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்களை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தன்வசப்படுத்தி வைத்திருந்தவர்

எம்ஜிஆர்.உழைக்கும் மக்கள், விவசாயிகள், மீனவர்கள், காவல்துறையினரின் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்திருந்தது. பெண்கள் மீதான எம்ஜிஆரின் உயர்ந்த கருத்துக்கு, தாய்க்குலம் ஆரத்தி எடுத்து கொண்டாடினர்.

குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்ட எம்ஜிஆரின் படங்களுக்கு ரசிகர்களும் ஏராளம். நல்ல கருத்துக்களை, தன் படங்களில் அவர் சொல்லத் தவறியதில்லை. எம்.ஜி.ஆரின் இயல்பிலும் சுபாவத்திலும் கருணை குணம், துணிச்சல், சிந்தனைத் தெளிவு போன்றவை தான் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது.

பத்து ஆண்டுகள் முதலமைச்சராக அவர் இருந்த போது, ஏழை மக்களள் மீது அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார். அவர்களுக்காக பல நல திட்டங்களைக் கொண்டு வந்தார். பசியிலும் வறுமையிலும் தான் வாடியது போல், பிள்ளைகள் பசியோடிருக்கக் கூடாது என அவர் சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். இவர் கடந்த 1987, டிசம்பர் 24-இல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். இன்று அவரின் 31-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.


Top