logo
ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு.

ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு.

12/Dec/2020 05:46:46

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சனிக்கிழமை உயிரிழந்தார்.

 கந்தர்வகோட்டை அருகேயுள்ள கணபதிபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகள் அஞ்சலி(15). கந்தர்வகோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த இவர், கரோனா விடுமுறையால் அவரது உறவினரான ஆலங்குடி அருகேயுள்ள கே.வி.கோட்டையைச்  சேர்ந்த சிவக்குமார் என்பவரது வீட்டில் கடந்த 1 மாதமாக தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள பெரியகுளத்திற்கு அவரது உறவினரான 10 வயது சிறுமியோடு அஞ்சலி குளிக்க சென்றுள்ளார். அப்போது, ஆழம் அதிகமான பகுதிக்கு சென்ற அஞ்சலி மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த, சிறுமி சப்தமிடவே அப்பகுதியில் மரம் வெட்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் குளத்தில் இறங்கி அஞ்சலியை மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஞ்சலி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

Top