logo
பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணிக்கு ஆட்கள் தேவை

பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணிக்கு ஆட்கள் தேவை

07/Dec/2020 08:47:20

புதுக்கோட்டை-டிச: புதுக்கோட்டையிலுள்ள  மாவட்ட பார்வைத்திறன் குறையுடையோருக் கான அரசு நடுநிலைப் பள்ளியில்  காலியாகவுள்ள கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்ட பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் தொகுப்பூதிய  அடிப்படையில் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு பின்வரும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு  ஊதியம் ரூ.15,000 என்ற ஊதியத்தில் தற்காலிகமாக நரப்பப்படவுள்ளது.

 இப்பணிக்கு  B.Ed கல்வித்தகுதியுடன்  B.E (Computer Science),  B.Sc (Computer Science), B.C.A., B.Sc (Information Technology) ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை. பார்வையற்றோர் பள்ளி என்பதால் இம்மாணவர்களுக்கு பயிற்றுவிக்க உரிய கூடுதல் கல்வி தகுதியுடைய பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சுய விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டையின் நகல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையின் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி, எம்எல்ஏ அலுவலகம் அருகில், புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை -622 001 என்ற முகவரிக்கு 11.12.2020 அன்று பிற்பகல் 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கிடைக்கும்படி  அனுப்பி வைக்கலாம். 

Top