logo
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் ஜெயிலுக்குத் தான் போவார் டிரம்ப்:அண்ணன் மகள்  பேட்டி

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் ஜெயிலுக்குத் தான் போவார் டிரம்ப்:அண்ணன் மகள் பேட்டி

06/Dec/2020 06:18:35

வாஷிங்டன், டிச:  டொனால்ட் டிரம்ப் செய்த குற்றங்களுக்காக, அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும், சிறைக்குத் தான் செல்ல வேண்டி இருக்கும் என, டிரம்பின் அண்ணன் மகளும், மனோதத்துவ நிபுணருமான மேரி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மோசமான மறுபக்கம் பற்றி, டூ மச் அண்டு நெவர் இனப் என்ற புத்தகத்தை எழுதியவர், மேரி டிரம்ப். சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி வெளியான இந்த புத்தகம், விற்பனையில் சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக, தி ரெக்கனிங் என்ற புத்தகத்தை, மேரி டிரம்ப் எழுதியுள்ளார். இது, அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில், மேரி டிரம்ப் அசோசியேட்டட் பிரஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் மீது எந்த வழக்கும் தொடுக்கக் கூடாது என்ற மரபை, டிரம்ப் விஷயத்தில் கடைபிடிக்கக் கூடாது. டிரம்ப், ஒரு கிரிமினல், கொடூரமானவர், நம்பிக்கை துரோகி. கொரோனா பரவலை சரிவர கையாளாமல், லட்சக்கணக்கானோரை பலி கொடுத்தவர். இது போல அவர் செய்த பல குற்றங்களுக்கு, நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என, விட்டு விடுவது, நாட்டின் மாண்பை அவமானப்படுத்துவது போலாகும்.
தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும், பதவி விலகாமல் பிடிவாதமாக இருப்பதில் இருந்து, அவர் குணத்தை அறியலாம். தன் வாழ்நாளில் ஒருபோதும் நேர்வழியில் வெற்றி பெறாத ஒருவர்தான், இப்படி நடந்து கொள்வார்.டிரப்பிற்கு, எப்போதும் வெற்றிதான் தேவை. அதற்காக, பிறர் பாதிக்கப்பட்டாலும் கவலைப்பட மாட்டார். கடந்த, 2017–இல் ஒருமுறை, வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த போதும், டிரம்பின் குணம் மாறவில்லை என்பது, எனக்கு அப்போது புரிந்தது என்றார்.

Top