logo
கீரமங்கலம் மின்வாரிய ஊழியர் தற்கொலை.

கீரமங்கலம் மின்வாரிய ஊழியர் தற்கொலை.

20/Sep/2020 07:04:36


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் துணைமின்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகேயுள்ள திருப்புனவாசலைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). இவர் கீரமங்கலம் மேலகாட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் கள பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை பணியில் இருந்துள்ளார். சக ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பணிக்கு சென்றபோது, காளிதாஸ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம்.

   இதுகுறித்து தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் கீரமங்கலம் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 


Top