logo
ஹைதாராபாத்  அருகே கார் – லாரி  மோதிய விபத்தில்  ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியானர்கள்

ஹைதாராபாத் அருகே கார் – லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியானர்கள்

03/Dec/2020 08:31:55

தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டத்தில் போர்வெல் லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.

 ஹைதராபாதில் இருந்து 50 கி.மீ தூரத்தில் ஹைதராபாத்-பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் செவெல்லா மண்டலத்தில் உள்ள மல்காபூர் கேட் அருகே இந்த விபத்து நேரிட்டது. பலியானவர்கள் அனைவரும் ஹைதராபாதின் தாட்பன் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் கர்நாடகாவில் உள்ள குர்மித்கலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

இன்னோவா காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பயணித்தனர். கார் ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையிலிருந்து வந்த போர்வெல் லாரி மீது மோதியது.விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆசிப் கான் (50), நாசியா பேகம் (45), சானியா (18), அர்ஷா (28), நாசியா பானு (36) மற்றும் ஆறு வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 5 பேர் காயமடைந்து அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக செவெல்லாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தால் ஹைதராபாத்-பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

Top