logo
தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு  ஆதரவாக புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

03/Dec/2020 08:25:02

புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்திவரும் மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் ஆர்ப்பட்டத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன் நிறைவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக விவசாய அணி மாவட்டச் செயலாளர் சீனி.பழனியப்பன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் முருகேசன், விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஜி.எஸ்.தனபதி, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சி.சோமையா, ஆரோக்கியசாமி, நடராஜன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், எம்.என்.ராமச்சந்திரன், துரை.நாராயணன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  

Top