logo
புதுக்கோட்டை அருகே மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்.

புதுக்கோட்டை அருகே மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்.

17/May/2020 05:39:47

புதுக்கோட்டை மாவட்டம் கல்லுப்பள்ளம் டாஸ்மாக் மதுக்கடை முன்பு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது.இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு  மதுக்கடைகளை திறந்துள்ளது.

  இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம்,கல்லுப்பள்ளம் டாஸ்மாக் மதுக்கடை முன்பு மதுக்கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாமிக்கே ஊரடங்கு,சாராயத்திற்கு சிவப்பு கம்பளமா,மக்கள் பிழைப்புக்கு வழியில்லாத நிலையில் இருக்கும்போது மதுக்கடை திறப்பு நாட்டுக்கு அவமானம் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.


Top