logo
உடும்புகளை பிடித்து டிக்டாக்கில் பதிவிட்ட 3 பேர் கைது

உடும்புகளை பிடித்து டிக்டாக்கில் பதிவிட்ட 3 பேர் கைது

07/May/2020 08:48:31

புதுக்கோட்டை  அருகே உடும்புகளை பிடித்து டிக் டாக் பதிவிட்ட 3 இளைஞர்களை வியாழக்கிழமை கைது செய்தனர்.

டிக் டாக் செயலியில் உடும்புகளை கையில் பிடித்தவாறு இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.அந்த டிக் டாக் வீடியோ வைரலானது.இதுகுறித்து, பல்வேறு தரப்பினர் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து,உடும்புகளை பிடித்துக்கொண்டு டிக் டாக்கில் வீடியோ பதிவிட்ட புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை  ஊராட்சி காத்தான்விடுதியைச் சேர்ந்த ரமேஷ்(20), பிரபு(25), சூரி(27) ஆகிய மூவரையும் புதுக்கோட்டை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


 

Top