logo
வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்.

வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்.

07/May/2020 02:58:32

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு வீடு வீடாகச் சென்று அரிசி,காய்கறிகள் உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் வழங்கி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.அவர்களுக்கு,நாம் தமிழர் கட்சி சார்பில் அரிசி,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.இப்பணியை காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீநிவாஸ் தொடங்கி வைத்தார். வாழ்வாதாரம் இன்றி மக்கள் முடங்கியுள்ள இந்நேரத்தில் நாம் தமிழர் கட்சியினரின் இத்தகைய சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.





Top