logo
 கமல்ஹாசன் பிறந்த நாள் விழா: ஈரோடு மேற்கு மண்டலத்தில் 6 நாட்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.

கமல்ஹாசன் பிறந்த நாள் விழா: ஈரோடு மேற்கு மண்டலத்தில் 6 நாட்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.

08/Nov/2020 12:39:38

ஈரோடு: மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 66-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து இன்று மக்கள் நீதி மய்யம்  கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர்  துரைசேவுகன் கூறியதாவது:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி ஈரோடு மேற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் தொடர்ந்து 6 நாட்களுக்கு துப்புரவு தொழிலாளர்கள், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்   என 666 பேருக்கு பட்டாசு ,இனிப்பு, வேட்டி -சேலை வழங்க கொண்டாடப்படவுள்ளது. சூரம்பட்டி பகுதியில் நகர செயலாளர் அப்புசாமி தலைமையில் ரபிக், சேகர், ரவிச்சந்திரன், மணிகண்டன் தினேஷ்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இதைப்போல், பெரியசேமூர் நகர செயலாளர் பிரவீன் குமார், காசிபாளையம் பகுதியில் கண்ணன், சூரியம்பாளையம் பகுதியில் முரளி ஆகியோர் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார். மாவட்டத் துணைச் செயலாளர் ஏ. எம் .ஆர். ராஜா உடனிருந்தார்.

முன்னதாக கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி 7.11.2020 -இல்  பெருந்துறையில் 4 இடங்களில் கட்சி கொடியேற்றி  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் முருகன், சேமாள், மகளிர் அணி செயலாளர் விஜி, ஆதிதிராவிடர் நல அணி சசிகுமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.

Top